loader
அவுட்ரீச் முகப்பு பக்கத்திற்கு செல்க

ஆற்றல் வாய்ந்த அர்ப்பணிப்புடன் கூடிய தன்னார்வலர்களின் துணையோடு நிகழ்த்தப்படும் ஈஷாவின் பணிகள் உலகெங்கிலும் உள்ள மனிதர்களுக்கான மேம்பாட்டிற்கும் சமூகங்கள் புத்துயிர் பெறுவதற்குமான வாழும் வழிமுறை ஆகும்.

அடுத்த தலைமுறையின் ஈடுபாடு

இளம் வயதிலேயே ஒரு குழந்தைக்கு படைப்பாற்றலும் தங்கள் உடல் நலனுக்கும் சுற்றுசூழலுக்கும் சிறந்தது எது என்பதைப் பற்றிய புரிதலும் பெரியவர்களை விட அதிகம் இருப்பத்தை நாம் காணலாம். அரசு பள்ளிகள், இளைஞர் படைகள் மற்றும் மன்றங்களோடு ஈஷா இணைந்து செயல்படுகையில், ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கான பணிகளில் முக்கியமான பங்கேற்பாளர்கள் குழந்தைகள் என்பது பலமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற குழந்தைகளை கிராமங்களுக்கு அழைத்து வந்து கிராமப்புற சூழலை, வாழ்க்கை முறையை அங்குள்ள குழந்தைகளிடம் கலந்துரையாடி, அனுபவத்தில் அறிந்து கொள்ள செய்வது நகர்ப்புற குழந்தைகளுக்கு கிடைக்கும் விலைமதிக்க முடியாத ஒரு வாய்ப்பாக அமையும். இதன் மூலம் அவர்கள் சிறு வயதிலேயே திறந்த உள்ளத்தோடும் மேம்பட்ட புரிதலுடனும் இருப்பார்கள்.

உரிமை எடுத்துக்கொள்வது

எந்த ஒரு முன்னெடுப்பும் தற்சார்புடையதாய் அமைய சமூகம் உத்வேகத்துடன் அதில் ஈர்க்கப்பட்டு இருக்க வேண்டும். இத்தகைய முழுமையான ஈடுபாட்டால் பங்கேற்பால் எல்லா தரப்பினருக்கும் பலன் கிடைக்கும். தன்னிறைவு பெறுவதும் செயலாற்றுவதும் அடுத்தவர்களைச் சார்ந்திருத்தலையும் உதவியற்ற தன்மையையும் அகற்றிவிடும். மக்களை ஈடுபடுத்தி செயலாற்றும் முறை அவர்களை ஈர்த்து பங்காற்ற செய்வதோடு மட்டுமல்லாமல் அவர்களின் நம்பிக்கையை தூண்டிவிடும். ஈஷாவின் எல்லா செயற்பாட்டிலும் சமூக திறன் மேம்பாடு ஒரு முக்கிய அம்சமாக எப்போதும் இருந்து வந்திருக்கிறது.

அடிமட்ட தன்னார்வ தொண்டு

ஈஷா அறக்கட்டளையின் அடித்தளம் ஈஷா தன்னார்வலர்கள். நூற்றுக்கணக்கான நகரங்கள் மற்றும் சிற்றூர்களில் தங்களையும் தங்கள் சூழலையும் மாற்றும் முனைப்போடு செயற்படும் 90 லட்சத்துக்கும் அதிகமான தன்னார்வலர்களை உள்ளடக்கிய நம்பகரமான கட்டமைப்பாய் இந்த அறக்கட்டளை விளங்குகிறது. அந்த தன்னார்வர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பல துறைகளிலும் அவர்களுக்குள்ள திறமையையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளும் தன்மை ஆகியவை ஈஷா பல மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்களை செயற்படுத்துவதை சாத்தியப்படுத்துகிறது.

திட்டங்களின் எல்லா நிலைகளிலும் எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் சமூக தலைவர்கள் ஈஷா தன்னார்வலர்கள் அந்த சமூகத்திலேயே விருந்தினர்களாக அவர்கள் தங்கியிருக்க வாய்ப்பளிக்கிறார்கள். உணவை பகிர்ந்து கொள்வது தினசரி வேளைகளில் பங்கு கொள்வது என அந்த சமூக மக்களோடு கலந்திருக்கும் போது அவர்களோடு ஒரு ஒற்றுமையை வளர்க்க ஈஷா குழுவினரால் முடிகிறது. இது அங்குள்ள சமூக தலைவர்களையும் திட்டத்தின்பால் ஈர்த்து அவர்களின் மக்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளுக்காக அதிக ஈடுபாட்டுடன் பங்குகொள்ள உத்வேகப்படுத்துகிறது.

படைப்பாற்றல்

எந்த ஒரு சிறந்த திட்டமும், சரியான திட்டமிடுதல் இருந்த போதிலும் அதை செயற்படுத்தும் போது நடைமுறை சிக்கல்களை சந்தித்து தான் ஆக வேண்டும். அங்குள்ள மக்களின் படைப்பாற்றல் திறனை சரியான வழியில் பயன்படுத்தி அத்தகைய சிக்கலுக்குரிய தீர்வை அடைய வேண்டும். சுயஉதவி குழுக்கள், சமூகம் சார்ந்த அமைப்புகள், அரசு அதிகாரத்தில் உள்ளவர்கள், வணிக சமூகங்கள் மற்ற அரசு சாரா அமைப்புகள் என்று அந்த திட்டத்தில் நாட்டமுடைய மற்ற குழுக்களோடு தொடர்பில் இருப்பதன் மூலம் அந்த திட்டத்துக்கு ஒரு கூட்டாற்றல் கிடைக்கிறது. பரந்த ஆதரவு தளம் அமையும் போது எந்த சிக்கலும் சரி செய்யப்படும். தர்க்கரீதியான திட்டமிடல் எந்த திட்டத்திற்கும் ஒரு உயர்நிலை கட்டுப்பாட்டைக் கொடுத்தாலும், உற்சாகமான சமூகத்தின் ஈடுபாட்டினால் கிடைக்கும் எதிர்பார்ப்பையும் மிஞ்சிய வெற்றியைக் கொடுப்பது போல் இருக்காது.

பெண்கள்

ஒட்டுமொத்த சமூகத்தின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்கு பெண்களின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. வீட்டை பராமரிப்பது, வருவாய் ஈட்டுவது, சமூக பணிகளை ஒருங்கிணைப்பது, குழந்தைகளை பேணுவது என கிராமப்புற சமூகங்களில் பெண்களின் சக்தி அளப்பரியது. தங்களின் குடும்பங்களுக்கான உணவில் ஒரு எளிய மூலிகையை சேர்ப்பது என்று பெண்கள் முடிவு செய்தால் அவர்களின் குடும்பத்தின் - முக்கியமாக குழந்தைகளின் - ஆரோக்கியம் வெகுவாக மேம்படும்.

விவசாயிகள்

பசுமைக்கரங்கள் திட்டத்தில் விவசாயிகளின் பங்கு ஆதாரமானது. தரிசு நிலங்களிலும் விவசாய நிலங்களிலும் வேளாண்காடு வளர்ப்பை மேற்கொள்வது என்பது அவர்கள் முன்னெடுத்த ஒரு முக்கிய அம்சம். விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமும் அவர்களை தொடர்ந்து சந்தித்து வருவதன் மூலமும் விவசாயிகளை அணியாக திரட்டுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

கொண்டாட்டங்கள்

வரலாற்று ரீதியாக பார்த்தால், பண்டைய இந்திய கலாச்சாரம் வருடத்தில் 365 நாட்களையும் கொண்டாட்டமாக கழித்திருப்பதை நாம் அறிய முடியும். ஆனால் சமீப காலங்களில் அந்த கொண்டாட்டங்கள் குறைந்து பொருளாதாரம், ஏற்றத்தாழ்வுகள் என தினசரி வாழ்வில் இருக்கும் அழுத்தங்கள், கடமைகள் என பல சிக்கல்கள் மக்கள் இயல்பாக ஆனந்தத்தை வெளிப்படுத்தும் தன்மையை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. எந்த ஒரு திட்டத்திலும் கொண்டாட்டத் தன்மையை கொண்டுவந்தால் எதிர்பார்க்காத வெற்றிகளை அது கொடுக்கும் என்பதை அனுபவத்தில் நாம் அறிகிறோம். மரம் நடுதலோ மருத்துவ மையங்களோ சமூக கல்வியோ எல்லா திட்டங்களிலும் ஆனந்தமான சூழலை வளர்ப்பதில் முன்முனைப்பாக செயல்படுகின்றது.

அரசின் பங்கு

நடைமுறையில் இருக்கும் அரசு திட்டங்கள் மற்றும் உதவிகள் மக்களுக்கு கிடைக்கும் வண்ணம் ஈஷா திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கிராம மக்கள் தங்களின் உரிமைகளை அறிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் முடிவில் அந்த திட்டங்களை தாங்களே முன்னெடுத்திச் செல்லும் திறனை இதன் மூலம் பெறுகிறார்கள் - உதாரணத்திற்கு கலைஞர் காப்பீட்டுத் திட்டம்.